வெள்ளி, 26 பிப்ரவரி, 2010
2009 - இலக்கியப்போட்டி
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம்
2009 - இலக்கியப்பரிசுகள்
நாவலாசிரியர் கு. சின்னப்பபாரதியின் பெற்றோர் அமரர் பெருமாயிகுப்பண்ணன் நினைவுப்பரிசு நாவலுக்காக ரூ.5000/-
புதுமைப்பித்தன் நினைவுப்பரிசு சிறந்த சிறுகதை நூலுக்கு ரூ. 4000/-
குன்றக்குடி அடிகளார் நினைவுப்பரிசு தமிழ் வளர்ச்சிக்கு உதவும் நூல்
ரூ. 4000/-
அமரர் சேதுராமன் அகிலா நினைவுப்பரிசு சிறந்த குழந்தை இலக்கிய நூலுக்கு ரூ. 2500/-
தமிழறிஞர் வ.சு.ப.மணிக்கனார் நினைவுப்பரிசு சிறந்த மொழி பெயர்ப்பு நூலுக்கு ரூ. 2000/-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்க விருது - சிறந்த இரு குறும்படங்கள் மற்றும் சிறந்த இரு ஆவணப்படங்களுக்கு தலா ரூ. 2500/-
அமரர் சு. சமுத்திரம் நினைவுப்பரிசு ஒடுக்கப்பட்ட மக்கள் பற்றிய படைப்பு ஒன்றுக்கு (கதை, கவிதை, நாவல், ஆய்வு, கட்டுரை, என்று எதுவாகவும் இருக்கலாம்) ரூ. 10000/-
படைப்புகள் அனுப்ப
கடைசி நாள் 30.04.2010
அனுப்ப வேண்டிய முகவரி
பொதுச் செயலாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-
கலைஞர்கள் சங்கம், மாநிலக்குழு
28/21, வரதராஜபுரம் பிரதான சாலை,
தேனாம்பேட்டை, சென்னை - 600 018.
கட்டுரைப் போட்டி 2010
அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி ‘ஏப்ரல் 14’ மக்கள் அறக்கட்டளையின் சார்பில் கட்டுரைப்போட்டியை நடத்துகிறது. போட்டியின் தலைப்பு: சமூக மாற்றத்திற்கான அம்பேத்காரின் கல்விச் சிந்தனைகள்.
12ஆம் வகுப்பு முடித்த 29 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், இளம் பெண்கள் பங்கேற்கலாம்.
கட்டுரைகள் மூன்று பக்கம் அளவுடையதாக இருத்தல் வேண்டும். கட்டுரைக்கு பயன்படுத்தப்பட்டுள்ள நூல்களின் பட்டியல் இணைக்கப் பட வேண்டும். கட்டுரைகள் வந்து சேர கடைசி நாள் 15.3.2010.
முகவரி : அறிஞர் அம்பேத்கர் பிறந்த நாள் கட்டுரைப் போட்டி டாஸ்டெக் மையம், பெரியார் நகர், நல்லாங்குடி, தேவகோட்டை அஞ்சல்-630 302.
பரிசுத்தொகை : சிறப்பாக எழுதப்பட்ட 6 கட்டுரைகளுக்கு ரூ. 1000.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக