செவ்வாய், 26 ஜனவரி, 2010

காதல் கவிதைகள்



உன் சிரிப்பில்




உதிரும்



முத்துப்பரல்களை விடவா



காணாமல் போன



கால் கொலுசு



கவிதை பாடிவிடப்போகிறது?



*******



காத்திருந்து காத்திருந்து



நீயும், நானும்



எத்தனையோ முறை



ஏமாந்து போனாலும்



காத்துக்கிடக்கிறது



நமக்காக காதல்.



*******



அமுதம் சிந்தும் வார்த்தைகள்



மட்டுமின்றி அவ்வப்போது



நஞ்சும் கக்குகிறாய்



ஆனாலும்



எப்போதும் எனக்கு



மாணிக்கம் நீ.



*******



உன்னைக் காணும் முன்வரை



அரிச்சந்திரனாய் இருந்தேன்



என்பதை நம்பாத நீ



அடுக்கடுக்காய்



அவிழ்த்து விடும்



பொய் மூட்டைகளை மட்டும்



எப்படி ரசிக்கிறாய்?


கருத்துகள் இல்லை: