வெள்ளி, 2 ஜனவரி, 2009

கற்பிதம்


வயிறு முட்டும்
மலத்தைச் சுமந்தவாறு
பொதுக்கழிப்பறையில்
அவஸ்தைகளுடன்
காத்திருக்கிறோம்.
வெப்பமூச்சு நிரம்பி வழியும்
நெருக்கடி மிகுந்த பேருந்தில்
நுழைந்து பயணித்து
வெளியேறுகிறோம்.
மின்வெட்டால்
எப்போது ஊற்றப்படும் எனத்தெரியாமல்
நீண்டவரிசையில்
ரேசன்கடை
மண்ணெண்ணெய்
பல்கில் தவமிருக்கிறோம்.
ஆறுகளைத் தொலைத்துவிட்டு
குடிநீர் பாட்டில் வாங்க
கடைகளுக்கு அலைகிறோம்.
வாழ்தல் என கற்பித்துக்கொண்டாலும்
எப்படியேனும்
வாழக்கற்றுக் கொள்கிறோம்
ஒரு பச்சோந்தியைப் போல.

கருத்துகள் இல்லை: