வெள்ளி, 2 ஜனவரி, 2009

உன்னைத் துரத்தும் இசை


செத்தமாட்டின்
வீச்சம் மாறாத
பறையின் சாவொலி
உன்னைத் துரத்துகிறது.
மணம் பரப்பும் என்ற
பரப்புரைகளோடு
குசுவை கசியவிடும்
லாவகத்தோடு
சிந்தும் உனது இசையால்
திணறுகிறது காற்றின் திசைகள்.
எமக்கான இசை எனக்கு.
உமக்கான இசை உமக்கு.
இதில் எது புனிதம்?

கருத்துகள் இல்லை: