
வீட்டின் முற்றத்தில்
கிளைவிட்டு நிற்கும்
புங்கை மரக்கிளைகளில்
முருங்கை மரங்களில்
வந்தமரும் குருவிகளின்
சங்கீதம் குதூகலப்படுத்தும்.
இடை இடையே
இழவுக்கிளியின்
இடைவிடா ஆரோகணம்.
அந்திம கால மரங்களின்
இலையுதிர் கால
இலைகள் இரண்டு
என்னருகே
இளைப்பாறும் போது
எல்லாக்குருவிகளின்
சங்கீதமும் எனை வதைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக