வெள்ளி, 9 ஜனவரி, 2009

அபஸ்வர சங்கீதம்


வீட்டின் முற்றத்தில்
கிளைவிட்டு நிற்கும்
புங்கை மரக்கிளைகளில்
முருங்கை மரங்களில்
வந்தமரும் குருவிகளின்
சங்கீதம் குதூகலப்படுத்தும்.
இடை இடையே
இழவுக்கிளியின்
இடைவிடா ஆரோகணம்.
அந்திம கால மரங்களின்
இலையுதிர் கால
இலைகள் இரண்டு
என்னருகே
இளைப்பாறும் போது
எல்லாக்குருவிகளின்
சங்கீதமும் எனை வதைக்கும்.

கருத்துகள் இல்லை: