வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

சிரச்சேதம் செஞ்ச சிறுபுள்ள . . . .

கதிரறுத்து கிறுகிறுத்து

கண்ணும் ரெண்டும் நீலம்பூத்து . . .

சின்னக் கட்டாகக் கட்டச் சொல்லுறீயே-கண்ணைச்

சிமிட்டுறியே கருத்தக்குட்டி நீயே

சில்லறைய சிந்துன சிரிப்புல- என்மனசத்தான்

சிரச்சேதம் செஞ்ச சிறுபுள்ள



தண்ணீக் கொடமெடுத்து

தலைநனைஞ்சு உடல்நனைஞ்சு

தங்கம் நீ போககையில

என் அங்கமெல்லாம் கொதிக்குதடி-காதல்

தன்னால உதிக்குடி. . .

அள்ளி முடிஞ்ச கூந்தலிலே

என்னச் சுமந்து போறவளே

இரக்கம் இல்லையா உனக்கு-என்னை

இறக்கிவிட்டுப் போயேன்டி சிறுக்கி ( கதிரறுத்து )







மாமதுரை மல்லிகை நீ-என்

மனசக் கெடுக்குற நீ

கண்ணும் ரெண்டும் பூத்துப்போச்சுடி-மாமன்

கண்ணும் ரெண்டும் பூத்துப்போச்சுடி-உன்னைக்

காணலியே நேத்து ராத்திரி-கண்ணில்

ஏத்திவச்சேன் காதல் பூத்திரி. . . .

அந்தி நல்லா சாஞ்சுருச்சு

ஆளு அரவம் கொறஞ்சிருச்சு

வெரசா நீ வரவேணும்- கொஞ்சம்

வெட்கத்தையும் விடவேணும் . . . .

கருத்துகள் இல்லை: